யாதுமானவள்
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
Senthamizhe sollaayo?
cynfq;Fk; CLUtp Xq;fpaeP &w;Nw!
GyNthHfs; ePuhb ePe;jpa ePs;thNd
gyuwpa Ntz;bnahU ghl;nlOjp itj;Njd;
tpyfhJ ehDd;id tpdhj;jPahy; nkha;j;Njd;
ghujj;Jg; ghitAd;wd; G+uzj;jpy; %o;fpjpdk;
G+hpj;j Gytnuyhk; gy;fbj;Jj; Njhw;whH
XHgpbAk; fpl;lhky; "X"ntd;Nw NtHj;jhH
Xnuhj;jf; $g;ghlha; Xntd;Nw NtHj;jhH
gok;Gytd; ts;Stdpd; gy;gjpe;j khHNg
fpog;ghl;b mt;ittha; jpd;WJa;j;j ghf;Nf
njhy;fhg;gpaj; jr;rd; njhl;Lnra;j ahNo
vy;NyhUk; fhKw;Wk; rPHFd;wh fw;Ng
nrhw;rpyk;G Mba nrk;khg;Gytnuy;yhk;
#y;jhpj;J cd;dhNy E}w;Foe;ij
njhy;GytH rhHghf ehd;tpdT fpd;Nwd;
nrhy;yplB nre;jkpNo ePgpwe;jnjg;Ngh?
வியாழன், 30 ஜூன், 2011
மர்ம யோகிராம் -(யோகாவின் யூ(யோ)கம்)
யோகம் அடிக்குமா என்று?
அரசுடமையாக்கவேண்டுமாம்
ஆரம்பித்தவரல்லவா
காவிமீது அரசியல் சாயம்
அப்பட்டமாய்த் தெரிகிறதே
இதுவும் அதே மட்டைthaane
அதனால்தான் ஆதரிக்கத் தயங்குகிறேன்
வளைக்கவேண்டிய நிர்பந்தம்
அரசாங்கத்தின் மேல்
கைதுக்குப் பயந்து குதிப்பவர்
யோகாவின் யூ(யோ)கம்
வியாழன், 16 ஜூன், 2011
கலைகள் பலவிதம்.
ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் வெளிப்படுத்தும் அழகுதான் தனிப்பட்ட அக்கலைஞனின் திறமையாக வரையறுக்கப்படுகிறது.
கவிஞன் பெண்ணை வர்ணித்த மார்பகங்களோ மறைவிடங்களோ விரசமாகத் தெரியவில்லையாம், சிற்பி செதுக்கிய சிலையில் கொங்கைகளும், இடுப்பும் கலைநயமாகவே தெரிகிறதாம் ஆனால் ஒரு ஓவியன் வரைந்துவிட்ட நிர்வாணம்தான் விரசமாகத் தெரிகிறதாம். என்ன விந்தை இது?
இது தான் நடந்தது இன்று . "ஓவியம் ஆனான் ஓவியன்" என்ற எனது கவிதையைப் படித்துவிட்டு M.F. ஹுசைன் ஐ பாராட்டி எழுதிவிட்டு நான் இந்தியத்தாயின் நிர்வாணத்தை ரசிப்பதாக கூறுகிறார்கள்.
கலையை கலைநயத்தோடு பார்க்கத் தவறிவிட்டு மதச்சாயம் பூசி மெருகேற்றிக் குளிர் காயும் சில சுயநலக் கும்பல்களை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு ஒரு கலைஞனை கேவலப்படுத்துவது எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்ததென நானறியேன்.
M.F. ஹுசேனின் பாரத மாதா ஓவியத்தில் நிர்வாண ஆபாசம் இருப்பதாகக் கூறும் அறிவாளிகளே... சீதாவை பெண்தெய்வமாகப் போற்றும் நீங்கள், அவளை கம்பராமாயணத்தில் கம்பன் வர்ணித்த விதத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? ஆபாசத்தின் உச்சமாக, அருவெறுப்பாக உள்ள கவிதைகளை புனிதமாகக் கொண்டாடுகிறீர்களே இது எந்தவிதமான கலையைச் சேர்ந்து? உங்கள் மூளையில் என்னவிதமான ரசனைக் குறைபாடுள்ளது என சோதித்துப் பாருங்கள்.
கம்பராமாயணத்தில் ஒரு சில பாடல்களிலுள்ள விரசத்தை மட்டும் இங்கு கொடுக்கிறேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்துகொள்ள....
அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகள்...
கம்பன் கற்பனைமட்டுமல்ல எக்ஸ்-ரே உம் எடுக்கிறார் என்கிறார் அண்ணா... எப்படி?
இராமன் வில்லொடித்தது கேட்ட சீதை ..." "இராமனே தனக்கு மணாளன் என்பது உறுதியானது கேட்டு உளம் பூரித்த சீதையின் உணர்ச்சியை விளக்கக் கம்பன் அந்த அம்மையாரின் மறைவிடம் அந்த நேரத்திலே அந்த நினைப்பாலே என்ன நிலை அடைந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டுமா? இராம பிரவாகமோ, பிராட்டியாரின் பெருமையோ அந்த மறைவிடத்தைப்பறிய விளக்கமில்லாவிட்டால் பூர்த்தியாகாதா என்று பக்தர்களைக் கேட்கிறார்!
பாடலை உங்களுக்குக் கூறுகிறேன் தீர்ப்பளியுங்கள் தோழர்களே!" - என்கிறார்.
கோமுனியுடன் வருகொண்டலென்றபின்
தாமரைக் கண்ணினாநேன்ற தன்மையா
லாமவனே கொலேன்றைய நீங்கினான்
வாம மேகலையிற வளர்ந்த தல்குலே!
தெரிகிறதா நடந்த விஷயம்? காட்சியை இதோ காணுங்கள்
சேடி: அம்மா, வில்லை ஒடித்தார்!
சீதை: ஒடித்தது யாரடி?
சேடி: அவர்தான் , தேவி!
சீதை: யாரடி , சொல் சீக்கிரம்!
சேடி: சொன்னேனே அம்மா, அவர்தான் ஒடித்தார் ..
இந்த உரையாடல் நடக்கும்போது, சந்தோஷத்தில் சீதை திளைக்க "கலீரெ"ன்று ஒரு சத்தம் கேட்கிறதாம். அந்த சத்தம் கீழே விழுந்த மேகலையின் சத்தமாம். மேகலைஎன்றால் பெண்கள் மறைவிடத்தில் அணியும் அணிகலன்,! ஆனந்தத்தால் அல்குல் வளர, மேகலை அற்றுக் கீழே விழுந்ததாம் ஐயனின் பிராட்டிக்கு, சர்வலோக ரட்சகிக்கு...
இன்னொரு இடத்தில்...
இராமபிரான் தன் மனைவியை வர்ணிக்கிறாராம். இந்த உலகத்திலேயே மதபோதனைக்காக
என்று மக்கள் கொண்டாடப்படும் எந்தக் காவியத்திலும் காணமுடியாததை கம்பராமாயணத்தில் காணலாம் என்கிறார் அண்ணா.
அயோத்தியாக் காண்டம் , சித்திரக் கூடப் படலம் 31 ஆவது செய்யுளின் முதல் அடி:
"பாந்த டேரிவை பழிபடப் பரந்த பேர் அல்குல் ".
அதாவது வனத்தின் வசீகரத்தைக் காட்டிவரும்போது ... ஆசைக்கிளியே அங்கே பார் ஆரணங்கே இங்கே பார் என்று சொல்லாமல் ...
பாந்தள் - பாம் பின் படம் , தேர் - தேர்;
தட்டும்- ஆகியவையும்; பழிபட - உவமையாகாததால் ,
பழிப் புடைய பரந்த - பரவிய அகலமான;
பேர் அல்குல் - பெரிய அல்குல் உடையவளே! இங்கே பாரடி ...
என்று வனத்தின் காட்சிகளைக் காட்டிக்கொண்டு வருகிறாராம் இராமபிரான்.
எனக்குக் குமட்டுகிறது உங்களுக்கு எப்படியோ என்கிறார் அண்ணா.. .
இதைவிடக் கொடுமையாக இன்னொரு எடுத்துக்காட்டும் கூறிவிடுகிறேன்
சீதையைத் தேடி அனுமன் போகையில் அனுமநிடத்தில் சீதையின் அங்க அடையாளங்களை இராமன் கூறுவதாகக் கம்பன் கவிபுனைந்தது இது:
வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும், பாந்தழும் பணி வெண் றோங்கும்
ஓராலித் தேறும் கண்ட உனக்கு நான் உரைப்ப தென்ன?
இதன் அர்த்தமோ... என் மனைவியின் மேலிடமும் மறைவிடமும் இவ்விதமாக இருக்கும் என்று கூறி, இன்னின்ன அங்க இலட்சணமுடைய அவளை தேடிக் கண்டுபிடி என்று இராமர் பணிக்கிறார் என கம்பன் வர்ணிக்கிறார் ...
பரிதாபத்திற்குரிய அனுமனின் பாடு எவ்வளவு திண்டாட்டமாக இருந்திருக்கும்? இந்த அங்க லட்சணங்களை உடையவளை ஆராய்ந்து அறிந்து கண்டுபிடிக்க வேண்டுமே ... இப்படி ஏகப்பட்ட ஆபாச அணிவகுப்புகள் கொண்டதுதான் கம்ப இராமாயணம்.
இதையெல்லாம் புனிதமாகப் போற்றும் இவர்கள் ஹுசேனின் நிர்வாண மாதாவிற்கு வக்கிர சாயம் பூசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
பாரத மாதா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவளா என்ன? இந்தியக் குடிமக்களாகிய இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் சீக்கியர் ஆகிய ஒவ்வொருவருக்கும் சொந்தமானவளள்லவா? இதை எப்படி இந்துக்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிக்கொள்கிறார்கள் என்பது தான் புதிராக உள்ளது.
நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், கலைஞன் என்பவன் காலத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் எழுத்தோ, சிலையோ, ஓவியமோ... கலைஞனுக்கு ஒன்றுதான்.
அதனால் மூளைமேல் முலாம் பூசியிருக்கும் மதச்சாயத்தைத் துடைத்துவிட்டு கலையை கலையாகப் பாருங்கள் . கலைஞனை அவன் வாழும்
காலத்திலேயே போற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
புதன், 15 ஜூன், 2011
ஓவியம் ஆன ஓவியன் - M.F.ஹுசேன்
பொக்கிஷம் -
காக்கத்தவறி வாய்
பொத்திநின்றது அரசாங்கம்
மூலவிக்ரங்களே -
அபிஷேகம் செய்துவிட்டுத்தானே
தோன்றாத உங்களுக்கு -
இந்துக்களுக்கு மட்டுமா சொந்தமானவள்?
இந்து முஸ்லிம் கிருத்துவ சீக்கியர்
அனைவருக்கும் பொதுவானவளல்லவா?
அவளுக்கு எப்படி
இந்துச் சாயம் பூசப்படுகிறது?
ஜனநாயக நாட்டில்
தாய்நாட்டில் வாழ அனுமதிக்காத அரசு
அவர் பிணத்தை தாய் மண்ணில் புதைக்க
அனுமதிக்கிரதாம்...
தலை கவிழ்த்துக்கொள்ளுங்கள்
இந்தியப் பிரஜைகளே...
இந்த நிகழ்வு -
இந்தியவரலாற்றில்
இந்துக்கள் தம்முகத்தில் பூசிக்கொண்ட
இன்னொரு அழுக்கு !
வியாழன், 2 ஜூன், 2011
பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
ஞாயிறு, 8 மே, 2011
வரவுக்கேற்ற செலவு! - மாற்றுக் கருத்து!
மனிதன் - விசித்திரமானவன்
மனித வாழ்க்கை அற்புதமானது
சிலநூறு வருடத்திற்கு முன்
இயற்கையை ரசித்தான்
இயற்கையில் கிடைத்ததைப் புசித்தான்
வீட்டுத்தோட்டத்தில் விளைவதை உண்டு
இயல்பான வாழ்க்கை வாழ்ந்தான்...
தேவை என்பது -
உணவு உடை உறைவிடம் மாத்திரமே
காலத்தின் மாற்றம்
மனிதனின் தேவைகளும் மாற்றம்
கல்வியின் அவசியம்
வாழ்க்கையின் உயர்வு
நடைபயனம் ரத்தாகிவிட்டது
பத்தடிக்குமேல் உள்ள இடம் செல்ல
கார் தேவைப்படுகிறது
தோட்டம் மறந்தோம் -
நாமும் குளிர் சாதனத்துள் அடைக்கலம்
நம் உணவும் குளிர் சாதனப்பெட்டிக்குள்
சொகுசு வாழ்க்கைக்கு
அடிமையாகிவிட்ட சூழ்னிலையில்
எல்லாவற்றிற்கும் பணம் தேவைப்படுகிறது
மாதம் பிறந்தால்...
மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி கட்டணங்கள்
இணைய வாடகை, பெட்ரோல் கேஸ் செலவு
பள்ளிக்கட்டணம் பட்டுப்புடவை பார் செலவு
இன்னும் என்னன்னெவோ
ஆடம்பரமென்ற அத்தனையும் இன்று
அத்யாவசமாகிவிட்டது
எல்லாம் தேவையாகிவிட்டது
இவையின்றி இனி வாழ முடியாது
தேவை... அனைத்தும் தேவை
அதற்குப் பணம் தேவை....
இன்னும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்
வரவுக்கேற்ற செலவு செய் என்று!
மாற்றுகிறேன்...பழமொழியை ...
"செலவைக் கணக்கில் கொண்டு வரவிற்கு வழிசெய்" என்று!
உதவி செய்"
வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது
முரண்படுகிறேன் -
அடுத்தவருக்கு உதவுவது
அறிவிக்கப்பட வேண்டும்
தற்பெருமையிது என்று
தவறாக நினைப்பவர்கள்
தலையிலே குட்டிக் கொள்ளுங்கள்...
காரணம் இதுதான் -
உதவி தெரியப்படுத்தப்படும்போது
நாமும் இதுபோல் உதவ வேண்டும்ற
எண்ணத்தைத் தூண்டும்
உதவி மறைக்கப்படும்போது..
வாங்கிய கடனை திருப்பித்தராமல்
ஏமாற்றுவதற்கு வழி வகுக்கும்...
ஒருவன் உழைக்க
அடுத்தவன் தழைக்க
அமைத்த வழியாகிவிடும்
முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்
மாற்றுவோம்...பழைய மொழிகளை..
"உறவுகளுக்கு அறிவித்துவிட்டு உதவி செய்"... என்று